Saturday, June 19, 2010
புன்சிரிப்பு
புல்வெளியின் பனித்துளியும்
பூமொட்டு விரித்த செவ்விதழும்
அந்தி நேர செவ்வானமும்
இதமான மாலைத் தென்றலும்
இருள் நீக்கும் முழுநிலவும்
மெய் சிலிர்க்கும் கார்மேகமும்
கண்களை வருடும் வானவில்லும்
விரித்தாடும் மயில் இறகும்
துள்ளியோடும் மான் கூட்டமும்
இசை நீட்டும் கடல்அலையும்
ராகமாகும் குயில் பாட்டும்
வாசமிக்க மலர்களும்
முகம் மலர்ந்து இதழ்விரிக்கும்
உன் புன்சிரிப்புக்கு ஈடாகுமா?
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
எப்பேர் பட்டவரையும் புன்சிரிப்பு கவர்ந்திடும்.
nice
Post a Comment