Saturday, June 19, 2010

புன்சிரிப்பு


புல்வெளியின் பனித்துளியும்

பூமொட்டு விரித்த செவ்விதழும்

அந்தி நேர செவ்வானமும்

இதமான மாலைத் தென்றலும்

இருள் நீக்கும் முழுநிலவும்

மெய் சிலிர்க்கும் கார்மேகமும்

கண்களை வருடும் வானவில்லும்

விரித்தாடும் மயில் இறகும்

துள்ளியோடும் மான் கூட்டமும்

இசை நீட்டும் கடல்அலையும்

ராகமாகும் குயில் பாட்டும்

வாசமிக்க மலர்களும்

முகம் மலர்ந்து இதழ்விரிக்கும்
உன் புன்சிரிப்புக்கு ஈடாகுமா?

2 comments:

Anonymous said...

எப்பேர் பட்டவரையும் புன்சிரிப்பு கவர்ந்திடும்.

Divya said...

nice

Ads 468x60px

Featured Posts