பிறந்ததும் அழாத
குழந்தையின்மௌனம்
கொஞ்சும் மழலை கேட்டு
மறுமொழிபேசா தாயின்
மௌனம்
அடித்தே விளையாடும்
அண்ணனின்
மௌனம்
மதிப்பெண் அறிவிக்கையில்
ஆசிரியரின்
மௌனம்
வாலிப வயதில்
காதலின்
மௌனம்
சிகிச்சைக்கு வந்ததும்
மருத்துவனின்
மௌனம்
ஊதியம் கேட்டு
போராடுகையில் அரசின்
மௌனம்
காத்திருக்கும்
உழவனுக்கு மழையின்
மௌனம்
முடிவு தெரியும் வரை
வாக்காளனின்
மௌனம்
உண்மைதானோ
மௌனத்தின்
வலி அதிகம் தானோ?
3 comments:
மவுனமாக சிந்திக்க வைத்தது
மௌனம் பல நேரங்களில் கேள்விக்கு பதில் பல நேரங்களில் புரியாத புதிர் கவிதை அருமை வாழ்த்துக்கள்
nice
Post a Comment