Wednesday, May 4, 2011

மௌனம்


பிறந்ததும் அழாத
குழந்தையின்
மௌனம்


கொஞ்சும் மழலை கேட்டு
மறுமொழிபேசா தாயின்
மௌனம்


அடித்தே விளையாடும்
அண்ணனின்
மௌனம்


மதிப்பெண் அறிவிக்கையில்
ஆசிரியரின்
மௌனம்


வாலிப வயதில்
காதலின்
மௌனம்


சிகிச்சைக்கு வந்ததும்
மருத்துவனின்
மௌனம்


ஊதியம் கேட்டு
போராடுகையில் அரசின்
மௌனம்


காத்திருக்கும்
உழவனுக்கு மழையின்
மௌனம்


முடிவு தெரியும் வரை
வாக்காளனின்
மௌனம்


உண்மைதானோ
மௌனத்தின்
வலி அதிகம் தானோ?

3 comments:

karthikeyansethuraman said...

மவுனமாக சிந்திக்க வைத்தது

Prabashkaran Welcomes said...

மௌனம் பல நேரங்களில் கேள்விக்கு பதில் பல நேரங்களில் புரியாத புதிர் கவிதை அருமை வாழ்த்துக்கள்

Anonymous said...

nice

Ads 468x60px

Featured Posts